بسم الله الرحمن الرحيم
ஈஸி ஈஷா இரத்ததான சேவை மையத்தில் சேர்ந்து உயிர்களை காப்பாற்ற உதவுங்கள். உங்களின் ஒரு சிறிய செயல்பாடு ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க கூடும்!
ஈஸி ஈஷா ஃபவுண்டேஷன் மூலம் ஏற்பாடு செய்யப்படும் இந்த செயல்பாடு ஒரு சமூகசேவை முயற்சியாகும். இரத்த கொடையாளர்களையும் மற்றும் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
1. எங்கள் வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் இரத்தகொடையாளர்களின் தகவல்கள் கூடுமானவரை பரிசிலிக்கபட்ட பிறகே பதிவிடப்படுகிறது எனினும் அதன் நண்பகதன்மை குறித்து விசாரித்து அறிந்து கொள்ள வேண்டியது பயனாளிகளின் பொறுப்பாகும்.அதன் நம்பகதன்மை குறித்து நாங்கள் எந்தவித உத்தரவாதமும் அளிக்க முடியாது.
2. இரத்த தானத்திற்கு முன்பு நோயாளியின் மருத்துவர் அல்லது மருத்துவமனையின் ஆலோசனை அவசியம்.
3. இரத்த தானம் தொடர்பான அனைத்து மருத்துவ முடிவுகளும் தொடர்புடைய மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.
4. இரத்த தானம் செய்பவர்கள் தங்கள் உடல் நிலை மற்றும் ஆரோக்கியத்திற்கு தாங்களே பொறுப்பாக இருக்க வேண்டும்.
5. இரத்த கொடையாளர்களாக பதிவு செய்பவர்கள் தன்னார்வலர்கள் எனபதால் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எங்கள் வலைத்தளத்தில் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்கள் இரத்த தான நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த தகவல்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த மாட்டோம்.
கருத்துக்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்: +91 9944 83 5056